தமிழ்நிலவு

நெஞ்சு பொறுக்குதில்லையே! இந்த நிலைகெட்ட மனிதரை நினைந்துவிட்டால்

மாறாத காலனிய அடிமை மனப்பாங்கு

இந்திய-அமெரிக்க அணு சக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்த பன்னாட்டு அணு சக்தி முகமையுடன் (IAEA) செய்யப்படவுள்ள

கண்காணிப்பு ஒப்பந்த வரைவை மக்களின் பார்வைக்கு வைக்கத் தயங்கிய மத்திய அரசின் நடவடிக்கை காலனிய அடிமை மனப்பாங்கையே பிரதிபலிப்பதாக நமது மூத்த விஞ்ஞானி பி.கே. ஐயங்கர் வருத்தத்துடன் கூறியுள்ளது கருத்தில் எடுத்துக் கொண்டு யோசிக்கத்தக்கது.பன்னாட்டு அணு சக்தி முகமையுடன் மத்திய அரசு செய்யவுள்ள அந்த ஒப்பந்த வரைவின் விவரங்களை வெளியிடுமாறு இடதுசாரிகளும், அதற்கு முன்னர் நமது நாட்டின் மூத்த விஞ்ஞானிகளும் கோரியிருந்தனர். கண்காணிப்பு ஒப்பந்த வரைவு ஒரு ரகசிய ஆவணம் (privileged document) என்றும் அதனை பொதுவில் வெளியிட முடியாது என்றும் அயலுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி கூறினார்.அது ரகசியமான ஆவணம் அல்ல, அதனை பொதுவில் வெளியிட்டு தனது நாட்டு மக்களுக்கு இந்திய அரசு தெரிவிப்பதில் எந்தத் தடையும் இல்லை என்று பன்னாட்டு அணு சக்தி முகமை அதிகாரிகள் தெளிவுபடுத்தினர்.
பன்னாட்டு அணு சக்தி முகமையுடன் அமெரிக்கா பேசிவரும் கூடுதல் கண்காணிப்பு ஒப்பந்த வரைவு இணையத் தளத்தில் வெளியிடப்பட்டிருப்பதை சுட்டிக்காட்டிய மார்க்ஸிஸ்ட் கட்சி, அமெரிக்காவிற்கென்று ஒரு நடைமுறையும், இந்தியாவிற்கென்று வேறுபட்ட நடைமுறையும் உள்ளதாவென வினவியிருந்தது.இந்த நிலையில், இந்தியா ஒப்புதலுக்கு அனுப்பிய ஒப்பந்த வரைவு இணையத் தளத்தில் வெளியிடப்பட்டதும், அதனை மத்திய அரசின் அயலுறவு அமைச்சகம் முழுமையாக வெளியிட்டது.இது ரகசியமான ஆவணம் அல்ல என்பதும், அதனை வெளியிடத் தடையேதும் இல்லை என்ற விவரம் தெளிவுபடுத்தப்பட்டதும், சற்றும் வெட்கமின்றி அந்த வரைவு ஆவணத்தை வெளியிட்டது மத்திய அரசு.இதைத்தான், “வெள்ளைய காலனி ஆட்சியிடமிருந்து விடுதலைப் பெற்று 60 ஆண்டுக் காலம் கடந்துவிட்டப் பின்னரும், அன்று நம்மிடையே ஆழ ஊடுருவி ஒட்டிக்கொண்டிருந்த காலனி அடிமை மனப்பாங்கு இன்றளவும் மாறாததை வெளிப்படுத்துகிறது” என்று இந்திய அணு சக்தி ஆணையத்தின் முன்னாள் தலைவர் பி.கே. ஐயங்கர் வருத்தத்துடன் கூறியிருந்தார்.200 ஆண்டுக் காலம் நம்மை அடிமைப்படுத்தி ஆண்ட வெள்ளையர் ஆட்சிக் காலத்தில் நாம் எப்படி நடத்தப்பட்டோமோ அதே முறையில்தான் விடுதலைப் பெற்று 60 ஆண்டுகள் ஆகியும் நமது நாட்டு மக்களை, அவர்களால் வாக்களிக்கப்பட்டு தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகள் நடத்துகின்றன என்பதையே விஞ்ஞானி ஐயங்கரின் கருத்துகள் வெளிப்படுத்துகின்றன.


இதே இந்திய-அமெரிக்க அணு சக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தத்திற்கு ஒப்புதல் அளிக்கக் கூடிய அமெரிக்க நாடாளுமன்றத்தின் செனட்டும், காங்கிரஸூம் அதனை மிக விலாவாரியாக விவாதித்தன. ஆனால், நமது
நாடாளுமன்ற அவைகளில் அது குறித்து கேள்விகள் எழுப்பப்பட்டபோதெல்லாம் மேம்போக்காகத்தான் பதிலளிக்கப்பட்டதே தவிர, நேரான பதில் ஒருபோதும் தரப்படவில்லை. இதுதான் இரண்டு ஜனநாயக நாடுகளுக்கும் உள்ள வேறுபாடு. அடிமைத் தளையில் இருந்து விடுபட்டாலும் அந்த மனப்பாங்கிலிருந்து நாம் (அதாவது நமது அரசியல்வாதிகள்) விடுபடவில்லை. விடுதலை பெற்றோம், ஆனால் ஜனநாயகமயமாகவில்லை. அதற்குள் உலகமயமாக்கலில் புகுந்துகொண்டு, “இன்னும் 20 ஆண்டுகளில் பொருளாதார வல்லரசாகப் போகிறோம்” என்று முழங்கிக்கொண்டிருக்கின்றோம்.அந்த ஆவணம் வெளியிடப்பட்டதால்தானே, எரிபொருள் தொடர்ந்து வழங்கப்படுவது உள்ளிட்ட பிரதமர் கூறிய பல உறுதிமொழிகள் பெறப்படவில்லை என்பது வெளிபட்டது. இதனை மறைக்கத்தானே அதனை ‘ரகசிய ஆவணம்’ என்று கதை கூறியது.
நாட்டின் மின் தேவை நிமித்தமாக செய்யப்படும் ஒரு ஒப்பந்தத்தின் விவரங்களை வெளியிடுவதிலேயே இவ்வளவு தயக்கம் காட்டும் அரசுகள், நாட்டின் பாதுகாப்பு தொடர்பான ஒப்பந்தங்களில் நமது நாட்டின் நலனை காப்பாற்றுவார்கள் என்று எப்படி நம்புவது?நமது மாநில அரசுகள் கூட, ஒவ்வொரு நாளும் ஏதாவது ஒரு அன்னிய நிறுவனத்திடம் (அவர்கள் இங்கு வந்து முதலீடு செய்து தங்கள் நிறுவனங்களைத் தொடங்க) புரிந்துணர்வு ஒப்பந்தங்களை கையெழுத்திடுகின்றன. ஆனால் அவற்றின் விவரங்களை மக்களுக்கு வெளியிடுவதில்லை! இதெல்லாம் அந்த நாள் காலனிய ஆட்சியின் பிரதிபலிப்புகள்தான். சுதந்திரம் பெற்றோமே தவிர நமது மனப்பான்மையில் எந்த மாற்றமும் பெரிதாக ஏற்படவில்லை. அதனால்தான் பல நேரங்களில் கடுமையாகப் பணியாற்றி நமது விஞ்ஞானிகள் சாதித்த பல விடயங்களை புரிந்துகொள்ளாமலேயே சிறுமைபடுத்துகிறோம். அப்படிப்பட்ட மனப்பான்மை நம்மிடம் இருந்ததால்தான் இந்த ஒப்பந்தம் தொடர்பாக நமது விஞ்ஞானிகள் எழுப்பிய கேள்களுக்கு நமது அரசு பதில் கூறாமல் புறக்கணித்தபோதுகூட பெரிதாக கூக்குரல் ஏதும் எழவில்லை.அணு ஆயுத உருவாக்கத்திலும், அணு சக்தி தொழில் நுட்ப மேம்பாட்டிலும் நம்மை பெருமைப்படும்

உயரத்திற்கு கொண்டு சென்ற விஞ்ஞானிகளை - அவர்களின் எண்ணங்களை அறியாமல், இதனை ஒரு அரசியல் ரீதியான ஒப்பந்தமாக கருதி - புறக்கணித்ததன் விளைவே இன்று மத்திய அரசை நம்பிக்கை வாக்கெடுப்புக் கோரும் நிலைக்குத் தள்ளியுள்ளது.அரசியல்வாதிகளை விட்டுத்தள்ளுவோம், நாம் முதலில் அந்த காலனிய அடிமை மனப்பாங்கிலிருந்து விடுபடுவோம். உண்மையான ஜனநாயகத்தை நோக்கி நடைபோடுவோம்

நன்றி வெப்உலகம்

0 comments:

Post a Comment

தமிழ்நிலவு

சங்க நாதம்

எங்கள் வாழ்வும் எங்கள் வளமும்
மங்காத தமிழென்று சங்கே முழங்கு!
எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார்,
இங்குள்ள தமிழர்கள் ஒன்றாதல் கண்டே!

திங்களொடும் செழும்பரிதி தன்னோடும் விண்ணோடும்
உடுக்களோடும்
மங்குல்கடல் இவற்றோடும் பிறந்ததமி ழுடன்பிறந்தோம்
நாங்கள், ஆண்மைச்
சிங்கத்தின் கூட்டமென்றும் சிறியோர்க்கு ஞாபகம்செய்
முழங்கு சங்கே!

சிங்க ளஞ்சேர் தென்னாட்டு மக்கள்
தீராதி தீரரென் றூதூது சங்கே!
பொங்கு தமிழர்க் கின்னல் விளைத்தால்
சங்காரம் நிசமெனச் சங்கே முழங்கு!

வெங்கொடுமைச் சாக்காட்டில் விளையாடும் தோளெங்கள்
வெற்றித் தோள்கள்!
கங்கையைப்போல் காவிரிபோல் கருத்துக்கள் ஊறுமுள்ளம்
எங்கள் உள்ளம்!
வெங்குருதி தனிற்கமழ்ந்து வீரஞ்செய் கின்றதமிழ்
எங்கள் மூச்சாம்!
எங்கள் வாழ்வும்......

தேடு

"கீழ் படிய கற்றுக்கொள் கட்டளையிடும் பதவி உனக்கு தானாக வரும்"
-விவேகானந்தர்



பாரதிதாசன்

வலியோர் சிலர் எளியோர்
தமை வதையே புரிகுவதா?

மகராசர்கள் உலகாளுதல்
நிலையாம் எனும் நினைவா?

உதவாதினி ஒரு தாமதம்
உடனே விழி தமிழா!

கொலை வாளினை எடடா!
மிகுகொடியோர் செயல் அறவே!

குகைவாழ் ஒரு புலியே!
உயர் குணமேவிய தமிழா!

தலையாகிய அறமே
புரிசரி நீதி உதவுவாய்! சமமே

பொருள் சனநாயகம் எனவே
முர சறைவாய்!

"பாரதீ"

தேடிச் சோறு நிதந்தின்று – பல
சின்னஞ் சிறுகதைகள் பேசி - மனம்
வாடித் துன்பமிக உழன்று - பிறர்
வாடப் பலசெயல்கள் செய்து - நரை
கூடிக் கிழப்பருவம் எய்தி - கொடுங்
கூற்றுக் கிரையெனப்பின் மாயும் - பல
வேடிக்கை மனிதரைப் போலே - நான்
வீழ்வே னென்று நினைத்தாயோ !

தமிழ்

வெள்ளிப் பனிமலையின் மீதுலவு வோம்; - அடி
மேலைக் கடல்முழுதும் கப்பல் விடுவோம்;
பள்ளித் தலமனைத்தும் கோயில்செய்கு வோம்; எங்கள்
பாரத தேசமென்று தோள்கொட்டுவோம்.

சிங்களத் தீவினுக்கோர் பாலம் அமைப்போம்;
சேதுவை மேடுறுத்தி வீதி சமைப்போம்;
வங்கத்தில் ஓடிவரும் நீரின் மிகையால்
மையத்து நாடுகளில் பயிர் செய்குவோம்.

வெட்டுக் கனிகள்செய்து தங்கம் முதலாம்
வேறு பலபொருளும் குடைந் தெடுப்போம்;
எட்டுத் திசைகளிலுஞ் சென்றிவை விற்றே
எண்ணும் பொருளனைத்தும் கொண்டு வருவோம்.

முத்துக் குளிப்பதொரு தென்கடலிலே;
மொய்த்து வணிகர் பல நாட்டினர் வந்தே,
நத்தி நமக்கினிய பொருள் கொணர்ந்து
நம்மருள் வேண்டுவது மேற்கரையிலே.

சிந்து நதியின்மிசை நிலவினி லே
சேரநன் னாட்டிளம் பெண்களுட னே
சுந்தரத் தெலுங்கினிற் பாட்டிசைத்து
தோணிக ளோட்டிவிளை யாடிவரு வோம்.

கங்கை நதிப்புறத்துக் கோதுமைப்பண்டம்;
காவிரி வெற்றிலைக்கு மாறுகொள்ளு வோம்;
சிங்க மராட்டியர்தம் கவிதை கொண்டு
சேரத்துத் தந்தங்கள் பரிசளிப்போம்.

காசி நகர்ப்புலவர் பேசும் உரைதான்
காஞ்சியில் கேட்பதற்கோர் கருவிசெய் வோம்;
ராசபுத் தானத்து வீரர் தமக்கு
நல்லியற்கன்னடத்துத் தங்கம் அளிப்போம்.

பட்டினில் ஆடையும் பஞ்சில் உடையும்
பண்ணி மலைகளென வீதி குவிப்போம்,
கட்டித் திரவியங்கள் கொண்டுவரு வார்.
காசினி வணிகருக்கு அவைகொடுப் போம்.

ஆயுதம்செய் வோம் நல்ல காகிதம் செய்வோம்;
ஆலைகள் வைப்போம் கல்விச் சாலைகள் வைப்போம்;
ஓயுதல்செய் யோம்தலை சாயுதல்செய் யோம்;
உண்மைகள் சொல் வோம்பல வண்மைகள் செய்வோம்.

குடைகள் செய்வோம்உழு படைகள்செய் வோம்;
கோணிகள்செய் வோம் இரும்பாணிகள் செய்வோம்;
நடையும் பறப்புமுணர் வண்டிகள்செய் வோம்;
ஞாலம் நடுங்கவரும் கப்பல்கள் செய்வோம்.

மந்திரம் கற்போம்வினைத் தந்திரம் கற்போம்;
வானையளப் போம்கடல் மீனையளப் போம்;
சந்திரமண் டலத்தியல் கண்டுதெளி வோம்;
சந்திதெருப்பெருக்கும் சாத்திரம் கற்போம்.

காவியம் செய்வோம், நல்ல காடு வளர்ப்போம்;
கலைவளர்ப் போம், கொல்ல ருலைவளர்ப் போம்;
ஓவியம் செய்வோம் நல்ல ஊசிகள்செய் வோம்;
உலகத் தொழிலனைத்து முவந்து செய்வோம்.


‘சாதி ‏ இரண்டொழிய வேறில்லை’ யெ‎ன்றே
தமிழ்மகள் சொல்லியசொல் அமிழ்த மெ‎ன்போம்;
நீதி நெறியினின்று பிறர்க்குதவும்
நேர்மையர் மேலவர்; கீழவர் மற்றோர்.


Blog Archive