"இன்று கும்பகோணத்தில் தீயில் கருகிய சின்னசிறு ரோஜாக்களுக்கு நம் கண்ணீரில் அஞ்சலி செலுத்துவோம்"
நம்மால் வேறென்ன செய்ய முடியும் நினைவு தினத்தன்று இரங்கல் கூட்டம் போடுவதும் கண்ணீர் அஞ்சலிசெலுத்துவதைத்தவிர ஜீலை 16 2004 ஆம் வருடம் நிகழ்ந்த நிகழ்வுக்கு ஜீலை 16 2008 வரை கண்ணீர் அஞ்சலிதானே நடத்திக்கொண்டிருக்கிறோம். அந்த வழக்கின் நிலவரம் என்ன அரசியல்வாதிகள் மேல் போட்டஊழல் வழக்கு போல் இன்னும் இழுத்துக்கொண்டுதான் இருக்கிறதே தவிர 4 வருடங்களாய் முடிந்தபாடில்லைவழக்குகளை நீதிமன்றங்கள் குறுகிய காலத்தில் முடித்தால் மட்டுமே மக்களுக்கு நீதிமன்றங்கள் மேல் நம்பிக்கைபிறக்கும். ஒரு குற்றவாளி 20 வயதில் ஒரு குற்றத்திற்க்காக கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டால்அவனுக்கு தண்டனை கிடைப்பது 40 வயதில் இந்த 20 வருடத்தில் அவன் ஜாமீன் என்ற பெயரில் வெளியில் உலவிக்கொண்டுதான்இருக்கிறான் இதற்கு எதற்கு தண்டனை பணம் வைத்திருக்கும் ஒருவனால் ஒரு குற்றத்திலிருந்து எளிதில் வெளி வந்துவிட முடிகிறது இது என்ன சட்டம் பணம் வைத்திருப்பவன் எதை வேண்டுமானாலும் செய்யலாமா?அப்படியானால் நீங்கள் வரையறுக்கின்ற சட்டங்கள் யாருக்கு ஒன்றுமில்லாத ஏழைகளுக்கா?நீங்கள் தருகின்ற தண்டனைகள் இயற்றுகின்ற சட்டங்கள் யாவும் ஒரு வேளை சோற்றுக்கே கஷ்டப்படும் ஏழைகளுக்கு மட்டும் தானா?
இந்த வழக்கு நீதிமன்றத்திற்க்கு வந்து 4 வருடங்களாகி விட்டது ஆனால் தீர்ப்பு வழங்கவில்லை எப்போது தீர்ப்புவரும் குற்றவாளி வாழ்ந்து அனுபவித்து இறந்த பிறகா?
நீங்கள் அனைத்து வழக்குகளையும் இப்படித்தான் இழுத்துக்கொண்டிருப்பீர்கள் ஆனால் இது போன்ற முக்கியவழக்குகளையாவது விரைந்து முடிக்கவேண்டாமா? குழந்தையை பறிகொடுத்தவர்களுக்கு நியாயம் வேண்டாமா? இதே நாளில் அவர்கள் தங்கள்குழந்தைகளை நினைத்து மலர் செண்டு வைத்து கண்னீர் அஞ்சலிசெலுத்த மட்டும் தான் உரிமையா? இது போன்ற வழக்குகளை உடனே முடித்து நீதி வழங்கினால் மட்டுமேகுற்றவாளிகளுக்கு பயம் வரும். இது போன்ற தவறுகள் மேலும் நிகழாமல் தடுக்கமுடியும் சட்டங்கள் கடுமையாக்கப்பட்டால் தான் குற்றங்களை குறைக்க முடியும் குற்றங்கள் குறைந்தால் தான் வழக்குகளைவிரைந்து முடிக்கமுடியும்.
நாம் சுதந்திரமடைந்த நாள் ஆகஸ்ட் 15, 1947 லிருந்தது போலவா வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.அன்று நாம் நிலவில் பாட்டி வடை சுட்டுக்கொண்டிருக்கிறாள் என்று நம்பி கொண்டிருந்தோம் ஆனால் அதே நிலவில் இன்று ஆராய்ச்சிகளை மேற்க்கொண்டிருக்கிறோம் இல்லையா?
உடை, மொழி.கலாசாரம்,உணவு,பழக்கவழக்கங்கள்போன்றவற்றில் எல்லாம் நம் இஷ்டத்திற்க்கு மாற்றிக்கொண்ட நாம் அன்றைய சூழலுக்கு ஏற்ப அமைக்கப்பபட்டஅரசியலமைப்பு சட்டத்தை மட்டும்மாற்றாமல் இருப்பது ஏன்? சட்டத்தை யார் மாற்ற வேண்டும் சாதாரணகுடிமக்களா? அரசு தானே மாற்ற வேண்டும் அனைத்தையும் மாற்றும்வல்லமை கொண்ட அரசு அரசியலமைப்பு சட்டத்தை மாற்ற மறுப்பது ஏன் ?ஏனென்றால் அவர்கள் சட்டத்தை மாற்றினால் அந்த சட்டத்தின் கீழ் அவர்களே கைது செய்யப்பட்டு தண்டனைக்குள்ளாக்கப்படுவார்கள் என்பது தான் உண்மை.
இதனால் தான் அரசு சட்டத்திருத்தம் கொண்டு வர பயந்து கொண்டு அதே பழைய துரு பிடித்த சட்டங்கள வைத்துக்கொண்டுஇன்னும் ஒப்பேற்றிக்கொண்டிருக்கிறது
" முடிந்தால் குற்றவாளிகளுக்கு தண்டனை கொடுங்கல் இல்லையென்றால் குற்றவாளிகளை எங்களிடம் ஒப்படைத்து விடுங்கள் என்றுமக்கள் தாங்களே சட்டத்தை கையில் எடுக்கு முன் அரசு இதற்கு ஒரு முடிவு எடுக்கவேண்டும் என்பது அனைவரின் விருப்பம் "

0 comments:
Post a Comment