தமிழ்நிலவு

நெஞ்சு பொறுக்குதில்லையே! இந்த நிலைகெட்ட மனிதரை நினைந்துவிட்டால்

குமுதத்தில் ராமதாசின் அதிரடி பேட்டி

தி.மு.க. கூட்டணியிலிருந்து பா.ம.க. அதிரடியாக வெளியேற்றம், டெல்லியில் சோனியா, அன்புமணி சந்திப்பு, திருமாவளவன் சமரச முயற்சி... என தமிழக அரசியல் களம் மீண்டும் சூடு பிடித்திருக்கிறது. என்னதான் கட்சியின் பொதுக்குழுவைக் கூட்டி வெளியேற்றப்பட்டது மகிழ்ச்சி என்று சொன்னாலும், எதிர்பாராத நேரத்தில் திடீரென்று தூக்கியெறியப்பட்ட கோப ரேகைகள் பா.ம.க. தலைவர் டாக்டர் ராமதாஸ் முகத்தில் குறுக்கும் நெடுக்குமாய் விரிந்து கிடக்கின்றன.இனி அவருடனான பேட்டி...
தி.மு.க. கூட்டணியிலிருந்து வெளியேற்றப்பட்டிருக்கிறீர்கள். எப்படி உணருகிறீர்கள்?
``நான் உணர்வது ஒருபுறம் இருக்கட்டும். எங்களது கட்சித் தொண்டர்கள், பொறுப்பாளர்கள்,பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவருக்கும் இது மகிழ்ச்சிதான். 2006-ஆம் ஆண்டு தேர்தலில் நாங்கள் தி.மு.க.வுடன் செய்துகொண்டது தொகுதி உடன்பாடுதான். கூட்டணி அல்ல. கூட்டணி ஏற்பட்டிருந்தால் குறைந்தபட்ச செயல் திட்டம் உருவாகியிருக்கும். ஆனால் அப்படி எதுவும் இல்லை. உங்களுக்கு செல்வாக்கு இருக்கும் தொகுதிகளில் பா.ம.க.வுக்கு வாக்களியுங்கள். அதேபோல் நாங்கள் தி.மு.க.வுக்குச் செய்கிறோம் என்று சொன்னோம். அவ்வளவுதான்.
அதைத் தவறுதலாக `தோழமைக் கூட்டணி' என்று சொல்லி விட்டோம். ஆனால், அந்த தோழமை உணர்வை சட்டமன்ற, உள்ளாட்சித் தேர்தல்களில் கூட தி.மு.க. எங்களிடம் காட்டவில்லை என்பதுதான் உண்மை.''
பா.ம.க. வெளியேற்றப்பட குருவின் பேச்சு மட்டும்தான் காரணமா?
``இல்லை. அதனை ஒரு காரணமா சொல்றாங்க. குரு எங்கள் கட்சியின் மாவட்ட பொதுக்குழுவில் பேசிய பேச்சு அது. அதற்காக அன்றே அவர் மீது எஃப்.ஐ.ஆர். போட்டிருக்காங்களே. அதுதவிர, குரு மீது இரண்டு பொய் வழக்குகளும் போட்டிருக்காங்க. சரி... நான் கேட்கிறேன். இவர்கள் கட்சியினர் பேசாத பேச்சா.
காமராஜரை, கக்கனை கேவலமாகப் பேசவில்லையா? வெற்றிகொண்டான் என்னைப் பற்றி அவதூறாகப் பேசவில்லையா? அதற்காக குரு பேசியதை நான் நியாயப்படுத்தவில்லை.அவரைக் கூப்பிட்டு கண்டித்தேன். அதுசம்பந்தமாக கலைஞருக்கு கடிதம் எழுதினேன். அவரும் குரு மீது உள்ள வழக்குகளை வாபஸ் வாங்குவதாகச் சொன்னார். ஆனால் ஆற்காடு வீராசாமிதான் இடையில் புகுந்து தடுத்துவிட்டார்.''
சரி. குருமீது நிறைய வழக்குகள் இருக்கு. அப்படியிருக்க அவரை நீங்கள் ஏன் கட்சியில் வைத்திருக்கவேண்டும் என்ற பேச்சிருக்கிறதே?
``அப்படிப் பார்த்தால் எந்தக் கட்சியிலும் யாரும் இருக்கமுடியாது.''
`டாக்டர் அன்புமணி மீது எனக்கு அன்பு உண்டு' என்று கலைஞர் அறிவித்த மறுநாள் சோனியாகாந்தியை அன்புமணி சந்தித்தது சரியான அணுகுமுறையா?
``அப்படிச் சொல்லமுடியாது. இங்கே நாங்கள் தி.மு.க.வுக்கு வெளியில் இருந்து ஆதரவு கொடுக்கிறோம். ஆனால் மத்தியஅரசில் அமைச்சராக அங்கம் வகிக்கிறோம்.அதனால் எங்களது நிலையை ஐக்கிய முற்போக்குக் கூட்டணி தலைவருக்குத் தெரியப்படுத்தவேண்டிய பொறுப்பு இருக்கு. அதனால்தான் அன்புமணி சோனியாவைச் சந்தித்தார்.''
குரு பேச்சைக் கேட்டுக்கொண்டு நீங்கள் செயல்படுவதாகவும் அது ஜி.கே.மணிக்கும் உங்கள் மகன் அன்புமணிக்கும் பிடிக்கவில்லை என்று கூறப்படுகிறதே?
``இது வடிகட்டிய பொய்.''
தி.மு.க.அரசு கொண்டுவந்த சிறப்புப் பொருளாதார மண்டலம், துணைநகரம்... என மக்கள் நலத் திட்டங்களை கடுமையாக எதிர்க்கி றீர்கள். அதனால் மாநிலத்தின் வளர்ச்சி பாதிக்கப்படாதா?
``கடந்த இரண்டு ஆண்டுகளாக தி.மு.க. அரசு ஏழை மக்களின் விளைநிலங்களை பன்னாட்டு நிறு வனங்களிடம் ஒப்படைப்பதில்தான் முனைப்புக் காட்டுகிறது. மாநிலத் தின் வளர்ச்சியில் அவர்களுக்கு அக்கறை இல்லை. மாறாக இந்த விஷயத்தில் கருணாநிதி, `தரகு' வேலை பார்க்கிறார்.
எத்தனையோ பன்னாட்டு நிறுவனங் களுடன் இந்த அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்டிருக்கு. அதனால் நம்மவர்களுக்கு வேலைவாய்ப்புக் கிடைத்ததா? ஐம்பதாயிரம் பேருக்கு வேலை கிடைத்ததாக கருணாநிதி சொல்கிறார். அது சம்பந்தமாக நான் அவரிடம் வெள்ளை அறிக்கை வெளியிடச் சொன்னேன். ஆனால் இன்றுவரை அவர் செய்யவில்லை.''
தேர்தல் நெருங்கும்போதெல்லாம் பா.ம.க.அணி மாறுவது வாடிக்கையாகிவிட்டதே?
(சற்றே கோபமாக!) ``இந்தக் கேள்வியே தவறு. துருப்பிடித்த கேள்வியும் கூட. இப்போது நாங்களாக வெளியேறவில்லை. வெளியேற்றப் பட்டிருக்கிறோம். 1967-ல் ராஜாஜியும், அண்ணாவும் கூட்டணி வச்சாங்க. அப்புறம் மூன்றே மாதத்தில் தேனிலவு முடிந்ததுன்னு சொன்னாங்க. தமிழ்நாட்டில் தேர்தலின்போது ஒரு கட்சி மற்றொரு கட்சியுடன் கூட்டணி வைத்தால் அடுத்த தேர்தலில் கூட்டணி தொடர்ந்ததாக வரலாறு இல்லை. ஆனால் எங்களை நோக்கி மட்டுமே இந்த `சந்தர்ப்பவாதம்' என்கிற விமர்சனம் முன்வைக்கப்படுகிறது.'' அமைச்சர் பொன்முடி மீதிருக்கும் காழ்ப்புணர்ச்சி காரணமாகத்தான் அவர் சார்ந்துள்ள கல்வித்துறை மீது நீங்கள் குற்றச்சாட்டுகளை அள்ளி வீசுவதாகச் சொல்கிறார்களே?
``இதில் உண்மையில்லை. ஜெயலலிதா ஆட்சியின்போதும், இந்த ஆட்சியிலும் கல்வித்துறையில் நடந்துவரும் கொள்ளைகளை மட்டும்தான் சுட்டிக்காட்டுகிறோம். தனிநபர் விரோதத்தை பா.ம.க. என்றுமே பாராட்டுவதில்லை.''
தி.மு.க.வுடன் கருத்து வேறுபாடு வரும்போதெல்லாம் இடதுசாரி தலைவர்கள் கலைஞரை நேரில் சந்திப்பதுண்டு. அதேபோல் நீங்களும் செய்திருக்கலாமே?
``சந்தித்து என்ன பயன்? `நீங்கள் என்னிடம் பேச விரும்பினால் தொலை பேசியில் பேசுங்கள்' என்று கருணாநிதி சொல்வார். இப்போது தொலைபேசி ஒட்டுக்கேட்கப்படுகிறது. அதனால் நான் விரும்பவில்லை.''
கட்சி ஆரம்பித்த நாள் முதல் தனித்துப் போட்டி என்கிறார் விஜய காந்த். ஆனால் நீங்கள் அப்படிச் சொல்லவில்லையே. ஏன்? ``நாங்களும் கட்சி ஆரம்பித்தபோது தனித்து நின்றே போட்டியிட்டோம். பின்னாட்களில் ஒரு கட்சி ஆட்சி போய் கூட்டணி யுகம் வந்துவிட்டது. தனித்துப் போட்டி என்கிற வாதத்தை கட்சிகள் ஏற்றுக்கொண்டால், முதல் கையெழுத்து என்னோடதுதான்.''
திண்டிவனம் நகராட்சி பா.ம.க.தலைவர் தி.மு.க.வுக்குப் போயிருக்கிறாரே?
(டென்ஷனுடன்...) ``அதுதான் தி.மு.க. அவர்களது கடமை... கண்ணியம்... கட்டுப்பாட்டுக்கு விளக்கம் இதுதான். ஒருவாரம்கூட பொறுத்திருக்க மாட்டார்கள்.''
பா.ம.க.வையும்,தி.மு.க.வையும் இணையவைக்க திருமாவளவன் எடுத்துவரும் முயற்சி பற்றி...?
``அவரது முயற்சியை நான் வரவேற்கிறேன். குரு மீதுள்ள பொய் வழக்குகளை கருணாநிதி முதலில் வாபஸ் வாங்கவேண்டும். அதற்கு முன்பே குரு மன்னிப்புக் கேட்கவேண்டும் என்று கருணாநிதி சொல்வதில் அர்த்தமில்லை.கருணாநிதி ஆட்சிக்கு வரும்போதெல்லாம் சுபா.இளவரசனை வெளியில் கொண்டு வருவாங்க. இப்போதுகூட அவனுக்கு வாகன வசதிகளெல்லாம் செய்து கொடுத்தி ருக்காங்க. ஆற்காடு வீராசாமியும் இளவரசனும் சந்திப்பதுண்டு. ஒருவரை அழிப்பது என்றால் இவர்கள் எந்த நாடகத்தையும் அரங்கேற்றத் தயங்கமாட்டார்கள்.''.
அ.தி.மு.க.வுடன் கூட்டணி வைக்க திரைமறைவில் பா.ம.க. முயற்சிப்பதாக சொல்லப்படுகிறதே?
``இப்போது எங்கள் கட்சியைப் பலப்படுத்தும் வேலையை நாங்கள் பார்க்கிறோம். கூட்டணிப் பேச்சுவார்த்தைக்கு இது சரியான நேரமல்ல. தேர்தல் வரும்போது அதுபற்றிப் பேசுவோம். இப்போது எந்த முயற்சியும் எடுக்கவில்லை.''
- எஸ்.அன்வர்

0 comments:

Post a Comment

தமிழ்நிலவு

சங்க நாதம்

எங்கள் வாழ்வும் எங்கள் வளமும்
மங்காத தமிழென்று சங்கே முழங்கு!
எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார்,
இங்குள்ள தமிழர்கள் ஒன்றாதல் கண்டே!

திங்களொடும் செழும்பரிதி தன்னோடும் விண்ணோடும்
உடுக்களோடும்
மங்குல்கடல் இவற்றோடும் பிறந்ததமி ழுடன்பிறந்தோம்
நாங்கள், ஆண்மைச்
சிங்கத்தின் கூட்டமென்றும் சிறியோர்க்கு ஞாபகம்செய்
முழங்கு சங்கே!

சிங்க ளஞ்சேர் தென்னாட்டு மக்கள்
தீராதி தீரரென் றூதூது சங்கே!
பொங்கு தமிழர்க் கின்னல் விளைத்தால்
சங்காரம் நிசமெனச் சங்கே முழங்கு!

வெங்கொடுமைச் சாக்காட்டில் விளையாடும் தோளெங்கள்
வெற்றித் தோள்கள்!
கங்கையைப்போல் காவிரிபோல் கருத்துக்கள் ஊறுமுள்ளம்
எங்கள் உள்ளம்!
வெங்குருதி தனிற்கமழ்ந்து வீரஞ்செய் கின்றதமிழ்
எங்கள் மூச்சாம்!
எங்கள் வாழ்வும்......

தேடு

"கீழ் படிய கற்றுக்கொள் கட்டளையிடும் பதவி உனக்கு தானாக வரும்"
-விவேகானந்தர்



பாரதிதாசன்

வலியோர் சிலர் எளியோர்
தமை வதையே புரிகுவதா?

மகராசர்கள் உலகாளுதல்
நிலையாம் எனும் நினைவா?

உதவாதினி ஒரு தாமதம்
உடனே விழி தமிழா!

கொலை வாளினை எடடா!
மிகுகொடியோர் செயல் அறவே!

குகைவாழ் ஒரு புலியே!
உயர் குணமேவிய தமிழா!

தலையாகிய அறமே
புரிசரி நீதி உதவுவாய்! சமமே

பொருள் சனநாயகம் எனவே
முர சறைவாய்!

"பாரதீ"

தேடிச் சோறு நிதந்தின்று – பல
சின்னஞ் சிறுகதைகள் பேசி - மனம்
வாடித் துன்பமிக உழன்று - பிறர்
வாடப் பலசெயல்கள் செய்து - நரை
கூடிக் கிழப்பருவம் எய்தி - கொடுங்
கூற்றுக் கிரையெனப்பின் மாயும் - பல
வேடிக்கை மனிதரைப் போலே - நான்
வீழ்வே னென்று நினைத்தாயோ !

தமிழ்

வெள்ளிப் பனிமலையின் மீதுலவு வோம்; - அடி
மேலைக் கடல்முழுதும் கப்பல் விடுவோம்;
பள்ளித் தலமனைத்தும் கோயில்செய்கு வோம்; எங்கள்
பாரத தேசமென்று தோள்கொட்டுவோம்.

சிங்களத் தீவினுக்கோர் பாலம் அமைப்போம்;
சேதுவை மேடுறுத்தி வீதி சமைப்போம்;
வங்கத்தில் ஓடிவரும் நீரின் மிகையால்
மையத்து நாடுகளில் பயிர் செய்குவோம்.

வெட்டுக் கனிகள்செய்து தங்கம் முதலாம்
வேறு பலபொருளும் குடைந் தெடுப்போம்;
எட்டுத் திசைகளிலுஞ் சென்றிவை விற்றே
எண்ணும் பொருளனைத்தும் கொண்டு வருவோம்.

முத்துக் குளிப்பதொரு தென்கடலிலே;
மொய்த்து வணிகர் பல நாட்டினர் வந்தே,
நத்தி நமக்கினிய பொருள் கொணர்ந்து
நம்மருள் வேண்டுவது மேற்கரையிலே.

சிந்து நதியின்மிசை நிலவினி லே
சேரநன் னாட்டிளம் பெண்களுட னே
சுந்தரத் தெலுங்கினிற் பாட்டிசைத்து
தோணிக ளோட்டிவிளை யாடிவரு வோம்.

கங்கை நதிப்புறத்துக் கோதுமைப்பண்டம்;
காவிரி வெற்றிலைக்கு மாறுகொள்ளு வோம்;
சிங்க மராட்டியர்தம் கவிதை கொண்டு
சேரத்துத் தந்தங்கள் பரிசளிப்போம்.

காசி நகர்ப்புலவர் பேசும் உரைதான்
காஞ்சியில் கேட்பதற்கோர் கருவிசெய் வோம்;
ராசபுத் தானத்து வீரர் தமக்கு
நல்லியற்கன்னடத்துத் தங்கம் அளிப்போம்.

பட்டினில் ஆடையும் பஞ்சில் உடையும்
பண்ணி மலைகளென வீதி குவிப்போம்,
கட்டித் திரவியங்கள் கொண்டுவரு வார்.
காசினி வணிகருக்கு அவைகொடுப் போம்.

ஆயுதம்செய் வோம் நல்ல காகிதம் செய்வோம்;
ஆலைகள் வைப்போம் கல்விச் சாலைகள் வைப்போம்;
ஓயுதல்செய் யோம்தலை சாயுதல்செய் யோம்;
உண்மைகள் சொல் வோம்பல வண்மைகள் செய்வோம்.

குடைகள் செய்வோம்உழு படைகள்செய் வோம்;
கோணிகள்செய் வோம் இரும்பாணிகள் செய்வோம்;
நடையும் பறப்புமுணர் வண்டிகள்செய் வோம்;
ஞாலம் நடுங்கவரும் கப்பல்கள் செய்வோம்.

மந்திரம் கற்போம்வினைத் தந்திரம் கற்போம்;
வானையளப் போம்கடல் மீனையளப் போம்;
சந்திரமண் டலத்தியல் கண்டுதெளி வோம்;
சந்திதெருப்பெருக்கும் சாத்திரம் கற்போம்.

காவியம் செய்வோம், நல்ல காடு வளர்ப்போம்;
கலைவளர்ப் போம், கொல்ல ருலைவளர்ப் போம்;
ஓவியம் செய்வோம் நல்ல ஊசிகள்செய் வோம்;
உலகத் தொழிலனைத்து முவந்து செய்வோம்.


‘சாதி ‏ இரண்டொழிய வேறில்லை’ யெ‎ன்றே
தமிழ்மகள் சொல்லியசொல் அமிழ்த மெ‎ன்போம்;
நீதி நெறியினின்று பிறர்க்குதவும்
நேர்மையர் மேலவர்; கீழவர் மற்றோர்.


Blog Archive